என் வானவில் நீ -மனஹரன்
சிவப்பு
முதல்
விரல் தொட்ட
ஸ்பரிசம்
சமிக்ஞை
விளக்கின்
சிவப்பாய்
எனை
நகரவிடாமல்
இப்போதும்
நிறுத்துகிறது
ஆரஞ்சு
யாரும்
கேட்டிராத
குரலில்
நீ
செல்லமாய்
சினுங்கும்
போதை
ஆரஞ்சு
பழத்தோலின்
தெரிக்கும்
நீர்மத்தின்
கொஞ்சல்
மஞ்சள்
நீராடிய
ஈரத்தில்
காயாமல்
வீசும்
மஞ்சளின்
வாடை
எந்த
மூலையிலும்
எனை
தேடி
வசம்
கொல்லும்
பச்சை
எந்த
ஜவுளி கடையிலும்
பச்சை
சேலை எடுத்து
தோளோடு
அணைத்து
கண்ணாடியில்
பிழை
இளைத்து
மெல்ல
கரையும்
பொன்
சிரிப்பில்
எல்லாவற்றையும்
இழக்கும்
நீலம்
நீலக்கடல்
சூழ்ந்த
தங்கத்தரையில்
ஆழ்கடலில்
இல்லாமல்
மேலே
மிதக்கும்
சிப்பி
சிதைத்த
சிற்பமாய்
நீ
கருநீலம்
இம்மொருமுறை
காமம்
செப்பாது
தும்பியே
உன்
இன்னொரு
இணையின்
கருங்கூந்தல்
எந்த
ஷெம்புவின் விலாசம்
ஊதா
ஊதா
பூந்தோட்டத்தில்
உட்கார்ந்த
நீ
விழியின்
குவியத்தில்
அரும்பாய்
நனையாய்
முகையாய்
மொக்காய்
முகிழாய்
மொட்டாய்
போதுவாய்
மலராய்
பூவாய்
எல்லாமே நீ
வானவில்லில்
இன்னொரு
வர்ணமாய்
நீ
வாழ்க்கை
பின்னமாய் நீ
No comments:
Post a Comment