வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

முகங்களை 



இன்னும் கொஞ்சம் பொறு
நெற்றியில் கட்டிய சத்தியம்
மெல்ல
கண்களுக்கு இறங்கும்
நேரம் வரும்
அதுவரை
கொஞ்சம் பொறு

சிவனின் பெயரில் செய்தால்
நெற்றிக் கண்ணால்
சுட்டெரித்து விடுவானென
மகனின் திருநாமத்தில்
தில்லாலங்கடித்தோம்

கற்றவர்கள்தான்
சமுதாயத்தைக்
கொள்ளையடிப்பதற்காகவே
பட்டம் பெற்றிருக்கிறார்கள்
வைரமுத்து சொன்னதுபோல்
கட்டிய கோவணத்தையும்
களவாடிவிடுவார்கள்

மந்திரியிடம்
தந்திரமாய்
வாங்கியநிதியை
மந்திரம் செய்து
மாயமாக்கி இருக்கிறார்கள்

மக்களின் நெற்றியில் போட்ட
பட்டை நாமத்தை
மறைக்கவே
சத்தியத்தின் பெயரில்
செவ்வாடை அணிவிப்பு

சல்லடையால்
சலித்தெடுக்கப்பட்டவர்கள்
வாகை சூடிய
கதை போதும்

வார்த்தைக்கும்
வாக்கியத்திற்கும்
கையேந்துபவர்களின்
விலாசங்களை
உங்களின்
சத்தியங்களுக்கு
போதிக்க வேண்டும்

அஞ்சிக்கும் கஞ்சிக்கும்
மனு கொடுப்பவர்களின்
இல்லத்திலும்
உங்களை தோற்கடிக்கும்
வல்லவர்கள் இருப்பார்கள்
முகவரி பற்றி
முன்னேற வையுங்கள்

கொஞ்சம்
நீங்கள் நின்ற
தடயங்களை
தேடி பாருங்கள்

நீங்கள் வந்த
பாதைகள்
உங்களுடைய தாய்
இருக்காது




No comments:

Post a Comment