கோயில்
வாசலில்
ஒரு
ஜோடி காலணி
திருட்டுப்
போகமல் இருக்க
பிரித்து
விடுகிறார்கள்
சண்டாளர்கள்
– கல்
வீட்டுச்சுவரில்
மாட்டியிருந்த
தாத்தா
பாட்டி படங்களில்
ஒன்றை
மட்டும்
கீழிறக்கி
பூஜை
போடுகிறார்கள்
உரசிக்கொண்டிருந்த
அலமாரிகளை
அகற்றி
தூசி
தட்டி
இடைவெளியோடு
விட்டு
விடுகிறார்கள்
ராவெல்லாம்
ஒன்றாய்
இணைந்திருந்த
கதவு
அகன்று
விடை கொடுக்கிறது
இனி
இரவு
வரும் வரை
விழி
திறந்து காத்திருக்கும்
இரட்டைக்கிளவியைக்கூட
ரொம்ப
காலமாய்
கரிகுல
மேம்பாட்டு மையத்தினர்
பிரித்து
ஆண்டிருக்கிறார்கள்
சீன
உணவுக்குச்சிகள்
இரண்டாய்
ஜோடி
சேர்த்து
எவரும்
வைப்பதில்லை
ரெட்டாய்
பிறந்த
வாழைப்பழத்தை
பிரிக்காமல்
எவனும்
சாப்பிட்டதில்லை
இணையாய்
வாங்கி வந்த
குத்து
விளக்குகள்
மூலைக்கு
ஒன்றாய்
ஒற்றைக்காலில்
தங்கக்
கடைகளில்
உரசிக்
கொள்ளும்
கம்மல்
செவிக்கு
சென்றவுடன்
தூரப்பார்வையில்
ஏங்கி
தவிக்கும்
இவ்வளவையும்
பிரித்துப்
பார்க்கும்
மனிதனின்
காதல்
மட்டும்
எப்போதும்
சேர
வேண்டும் என்பதில்
என்ன
நியதி.
வெந்து
தனியட்டும்
வேர்களும்
வேகட்டும்.
No comments:
Post a Comment