எனக்கு
உன்னைக் கொஞ்சம்
தெரியும்
கவிதை
உனக்கு நன்றாய் வரும்
அன்பே வா
அழைக்கின்ற எந்தன் மூச்சே
பாடல் முதல்
குமரி பெண்ணின் நேசம்
கோழி குழம்பு வாசம் வரை
மட்டுமல்ல
நய்யாண்டியில் வரும்
ஆளவெட்டி
குழம்பு வெச்சிறுவாகூட
உனக்குப் பிடிக்கும்
நீ
மரபு வீச்சுகளைக்கூட
மனதளவில் நேசிக்கிறாய்
முயன்றால்
முத்தெடுக்க முடியும்
ஏனோ மொத்தமாய்
நிராகரித்துவிடுகிறாய்
அதுவும் சத்தமாய்
சதுரங்கம் ஆடுகிறாய்
மின்னல் துன்பலையில்
தேவையில்லாமல்
கெக்கரிக்கும்
எட்டுக்கும் பத்துக்கும்
கீழ்விழுந்த ஆறாய்
குரல் ஒலியால்
சினங்கொண்டு
சிலிர்த்துக்கொள்கிறாய்
படம் பார்க்கும்போதுகூட
நீ சிவப்பு பேனாவோடு
உட்காருவதாய்
எல்லாரும் புலம்புகிறார்கள்
இல்லையென்றால்
சீனு ராமசாமியின்
நீர்ப்பறவையில்
சைக்கள் முன் கம்பியில்
பைபலோடு சென்றவள்
பைபல் இல்லாமல் திரும்புவது
உன்
கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறது
உன்னையும்
பிரமிக்க வைத்த
பாரதிராஜாவின்
பொம்மலாட்டம்
இன்னும்
ஈரான் படமான
சொர்க்கத்தின் குழந்தைகள்
எல்லாமே
உன்னை தோற்கடித்தன
ம்…. இன்னும் உண்டு
உம்மகள் இமையுடன்
நீ வென்றது குறைவு
உன் இல்லாளிடம்
தோல்வி கண்டதும்
அதிகம்தான்
உன் சொந்த வரிகளைக்கூட
பிறர் எடுத்தாண்டபோது
மௌனம் காக்கிறாய்
நான் யாரென்று
கேள்
ம்… நானே சொல்கிறேன்
நான்தான் வேறுயாருமல்ல
நான் உன் சேய்
நீ என் தாய்
No comments:
Post a Comment