வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

எங்கேயோ கேட்ட பாடல் 

- மனஹரன்

ஒரு உணவுக்கடையில்
குடும்பத்தோடு
உட்கார்ந்தபோது
அங்கும் இங்கும்
ஓடி விளையாடிய
மெலயு இளஞ்சிறுசுகள்
இருவர்
என் கரம் பிடித்து
சலாம் செய்து
முத்தமிட்டு சென்றதும்

கல்லூரி காலத்தில்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்
வயோதிக மாது ஒருவர்
டெக்சி நிறுத்தி
தோல்வியில் உட்கார
டெக்சி ஏற்றி
அனுப்பியபோது
வாழ்வில் எல்லா
செல்வம் பெற
வாழ்த்து மொழிந்ததும்

நள்ளிரவில்
டாமான் சாரா ஹைட்டில்
பணி முடிந்து
சாலையில் நடந்தபோது
நின்ற டெக்சியும்
பஸ் நிலையத்தில்
இறக்கிவிட்டு
தொடர் பயணத்திற்கு
பணம் உண்டாவென கேட்டு
வாங்கிய பணத்தில்
பாதியை
மீண்டும் எனக்கு
கொடுத்ததும்

என் மானசீக நந்தவனத்திற்கு
வந்தவளின்
முகம்கூட பார்க்காமல்
அவள் என்னவள் என்றதும்
பிறகு
அவளே என்னவளானதும்

ஏதொவொரு
சீனன் கடையில்
உணவு வாங்க
சென்றதுபோது
சீன மழலையொருத்தி
தன் தாயைவிட்டு
என்னுடன் வந்து
அவள்  மொழியில்
கதை அளந்ததும்
போகும்போது
அங்கிள் பாய்யென
சொல்லி
கையாட்டி சென்றதும்

எங்கோ சுற்றிந்திரிந்த
நாயொன்று
வாலாட்டி வந்ததும்
குட்டிகளை ஈன்று
வீட்டின் பக்கத்தில்
மரித்துபோனதும்

எல்லாவற்றிற்கும்
ஏதொவொரு
தொடர்பில்லாத
தொடர்புண்டு

விழிகளுக்குள்
அடங்காத காட்சி
இன்னும்
வழி நெடுகிலும்
வாழ்க்கை முழுவதும்
தொடரும்

No comments:

Post a Comment