வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது


எது தப்பு?  எது தவறு? -மனஹரன்


முதல் தப்பு
நான் தமிழ் படித்தது

இரண்டாவது தப்பு
தமிழைக் கொஞ்சம்
நன்றாகப் படித்தது

மூன்றாவது தப்பு
சில நல்ல
கவிதைகளைப் படித்தது

நான்காவது தப்பு
சில நல்ல
இலக்கிய நண்பர்கள் கிடைத்தது

ஐந்தாவது தப்பு
நீயும் கவிதை எழுதலாம் என
சிலர் என்னை உசுப் பேத்திவிட்டது

ஆறாவது தப்பு
கவிதையை எழுதியதோடு
நில்லாமல்
அதை
பத்திரிகைக்கு அனுப்பியது

ஏழாவது தப்பு
பத்திரிகையில் வந்த
கவிதையைப்
பார்த்து அகமலர்ந்தது

எட்டாவது தப்பு
சில நல்ல கவிதைகளை
நீயும் எழுதி இருக்கிறாய்
என கோமுவும் கேஷ்டனும்
இன்னும் பிறரும் சொன்னது

அடுத்த தப்பை
செய்வதற்கு
இவையெல்லாம்
காரணிகளாய்
முன்வந்து நிற்கின்றன 

இல்லையென்றால்
“ போடா _ _ _” என
சொன்னபோது
பிடரியைத் தள்ளிவிட்டு
துருபிடித்த ஓவியனின்
மூக்கில்
உதிரம் ஒழுக
குத்து விட்டிருப்பேன்

எதுவும் முடியவில்லை
ஒரு தவறினால் தப்பு
நடந்துவிட்டது

-     

No comments:

Post a Comment