- மனஹரன்
கணக்கிற்கும்
நமக்கும்
ரொம்ப
தூரமா?
இராமானுஜன்
சூத்திரம்
நாம்
மறந்து போனோமா?
இன்னும்
நம்மில்
பல பேருக்கு
மில்லியனுக்கும்
கோடிக்கும்
வித்தியாசம்
தெரிவதில்லை
லட்சத்திற்கு
எத்தனை
சுழியம்
என்பதே
பலருக்கு
தீராத
கணக்கு
ஆனால்
நம்
தினசரிகள் மட்டும்
கோடியிலும்
லட்சத்திலும்
கணக்குப்
பார்ப்பதில்
குறியாய்
இருக்கின்றன
சாமி
கணக்கு
முடியும்
முன்னே
காந்தி
கணக்கு
முன்னேறுகிறது
இடைவிடாமல்
கட்சி
கணக்கும்
காட்சியாகிறது
ஆனால்
முருகன்
கணக்கு மட்டும்
முட்டாள்
கணக்காய்
முடியாமல்
தொடர்கிறது
படித்த
கணக்கு
பாமரனுக்குக்கூட
தெரியும்
பட்டதாரிகளின்
கணக்கு
கல்குலேட்டர்
கண்களையும்
செவிடாக்கும்
நேற்றைய
கணக்கை
தீர்த்துவிடலாம்
பழைய
பக்கெட் கணக்கை
எந்தப்
பாட்டன் கணக்கில்
சேர்ப்பது?
கோடி
கணக்கை
தீர்த்த
ஞான வைத்தியன்
ஒருவன்
மட்டுமே
வேறு
யாரும்
இங்கிலர்
அந்த
காந்தி
கணக்கையும்
சாமி
கணக்கையும்
முருகன்
கணக்கையும்
எந்த
இராமானுஜன்
சூத்திரத்தினால்கூட
பெருக்கவோ
கூட்டவோ
கழிக்கவோ
முடியாது
காலன்தான்
கணித்து
சொல்ல
காலம்
பார்க்க வேண்டும்
அதுவரை
சுழியங்களை
சுண்டி
விளையாடுவோம்
No comments:
Post a Comment