- மனஹரன்
எப்படிச்
சொல்வது?
அடிக்க
முடியாது
வேறு
என்ன செய்வது?
தொட்டாஞ்சுறுங்கியுடன்
கை
கோத்தவர்கள் இவர்கள்
அதுதான்
தொடும்
முன்னே
சுறுக்கிக்
கொள்கிறார்கள்
வௌவாள்
இனத்தின்
முதல்பிரதிகளின்
வாரிசுகள்
இவர்கள்
தலைகீழாய்தான்
தொங்கி
கொண்டிருப்பார்கள்
கடைசி
வாரிசுகளை
கரங்களில்
ஏந்தி
கொண்டு
சோக
சுரங்கள்
பாடுவதில்
வல்லவர்கள்
இவர்கள்
ஆற்றைவிட்டு
கரையில்
படுத்துக்கொண்டு
நீலிக்கண்ணீர்விடும்
முதலைகளின்
முகவரி
பெற்றவர்கள்
இவர்கள்
நடு
ராத்திரியில்
முட்டை
விழிகளை
பிதுங்க
பிதுங்க
காத்திருக்கும்
ஆந்தைகளில்
ஆனந்த
தலையாட்டளுக்கு
ஜதி
சொல்பவர்கள்
இவர்கள்
எருமைகளின்
கால்களுக்கு
லாடாங்
அடித்து
எமனுக்கு
வாடகைக்கு
விடும்
அற்பர்கள்
இவர்கள்
அரவங்களை
கால்கூழியாக்கி
விஷப்பைகளை
விரல்களில்
ஏந்தி
பொய்(புன்ன)கைகளை
தூவி
விட்டவர்கள்
இவர்கள்
எல்லாமே
நண்பர்கள்தான்
நட்புக்கு
தீ
வைத்தவர்கள்
No comments:
Post a Comment