வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

கவிதையில் இதுவெல்லாம் சகஜமப்பா….. -மனஹரன்

ஏதோவொரு நாற்றம்
வீட்டின்
உள்ளேயும் வெளியேயும்

அம்மா
சாக்கடை வீச்சம்
வயிற்றைப்
பிடுங்குகிறது என்றார்

கொஞ்சகாலமாய்
நாய்கள்கூட
குரைத்துக்கொண்டே
இருந்தன


பன்றி பண்ணை
புதிதாய்
தொடங்கியதாய்
யாரும் வந்து பதிந்து
கொள்ளவில்லை

ஒரு வாரமாய்
காணாமல் போன
எதிர்வீட்டுப் பூனை
செத்துப்போனதாக
எல்லாரும்பேசிக் கொண்டதை
குட்டிகளோடு வந்து
அது பொய்யாக்கியது

தொங்கல் தெருவில்
தினம் நிறுத்தி வைக்கப்படும்
இண்டா வாட்டர் லாரிதான்
காரணமாக இருக்கும் என
கவுண்சிலர் கணித்தார்

சில நாளாய்
இந்தப் பாதையில்
ஆள் நடமாட்டம்
மெல்ல குறைந்தது

புதிய நபர்களின்
வருகை
மெல்ல அதிகரித்தது

ஆட்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப
சில வேளை
நாற்றம் வேகமாய்வீசும்

சிலர் இடமாற்றத்திற்கு
தயாராயினர்

கடைசியாய்
ஓய்வுபெற்ற
அரசியல்வாதி
அண்டைவீட்டுக்காரராக
குடியேறிய கதைதான்
கவிதையாய் மாறியது

No comments:

Post a Comment