எல்லாரும் சொல்வதுபோல்
குழந்தைகள்
வெள்ளை தாள்கள் அல்ல
பல விசித்திர
வண்ணங்களின் கலவைகள்
நம் உருவாக்கிய
நிறங்களிலிருந்து
அவை மாறுபட்டவை
செல்லச் சிணுங்களில்
பல கோடி வார்த்தைகளை
நட்டுவிடும் நாத்துகள்
சிந்தும் புன்னகையில்
பூமியையே புரட்டிபோடும்
மழலை ஒலிக்குள்
பல மொழி அகராதிகளை
பதுக்கி வைக்கும்
காந்த விரல் தீண்டலில்
தீயள்ளி தின்னும்
சுகமிருக்கும்
கொட்டும் விழி மழையில்
கோபுரங்கள்
குடை சாயும்
சின்ன சின்ன
கோபங்கள்
புள்ளிகளாகி கோலங்களகாகும்
மின் பாதங்கள்
அணிவகுத்த மேனியெங்கும்
முள் இழந்த ரோஜாக்களின்
நடனமிட்ட ஸ்பரிசங்கள்
மெட்டி விரல்
தொட்ட இடமெல்லாம்
வண்ணத்துப்பூச்சி ஊர்ந்த
வலி இருக்கும்
இமைகள் விரியும்
நயனங்களில்
ஒருகோடி கவிதைகள்
காத்திருக்கும்
பொக்கை வாயில்
ஒழுகும் அமிர்தம்
ஆயுர்வேத தீர்த்தமாகும்
மெல்ல சுழலும்
மெல்லின நாவின்
நர்த்தன பாசைகள்
கெஞ்சிடும்போதும்
கொஞ்சிடும்போதும்
சில்லறை சிரிப்பில்
சிதைத்திடும் அழகு
எல்லா சொத்தையும்
மொத்தாமாய் எழுதி
காலடியில் வைப்பேன்
குழந்தையாக……
No comments:
Post a Comment