வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

சாயம் போகாத ஆடை


ரொம்ப நாளாகிவிட்டது



இன்னும்

காயாமல் ஈரமாகிறது



தொழிற்சாலை சுவரில்

நண்பன் வரைந்த

சிறுநீர்க்கோலம்



புதர் மறைவில்

இரண்டுக்கு இடம் தேடிய

அந்திம வேளைகள்



இடைத்துண்டோடு

சைக்கிளோட்டிவரும்

பெரிசுகள்



வராதவளுக்கு

மரத்திலேறி

ஓசையெழுப்பி அழைக்கும்

இளவட்டங்கள்



கள்ளுக்கடைக்கு

வரிசைபிடிக்கும்

முதியவர்கள்



ஆலய பிராஞ்சாவில்

சீட்டாட்டமும்



அஞ்சடி நிழலில்

தாயமும்



இருளில்

பிரேக் இல்லாமல்

எதிரொலிக்கும்

ஜாக்கிறதை விசில்கள்



இன்னும்



பெளர்ணமியில்

இனங்களை மறந்த

பாரியும்



மழை திட்டியில்

போத்தையடியும்



திரைப்பட முடிவில்

எதிரியின் வருகைக்கான

எதிர்ப்பார்ப்பும்



ரொம்ப நாளாகிவிட்டது





கத்தியோடும்

சங்கிலியோடும்

இரும்புக்காப்போடும்

மிரட்டும் விழிகளோடும்

தடித்த வார்த்தைகளோடும்



கைகோத்த பிறகு



- மனஹரன்

No comments:

Post a Comment