நட்பெனும் நந்தவனம்
நவீன இலக்கியம்
வணக்கம்
நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது
எச்சில் மழை
இம்முறையும்
மிக சாமர்த்தியமாய்
வென்றுவிட்டதாய் நினைக்கிறாய்
தினமும் மனமுழுக்க
அழுக்குச்சேரும்போது
உனக்கு மட்டும் எப்படி ?
புன் சிரிப்போடு
பொழுது புறப்படுகின்றது
எத்தனை எத்தனை
சாபங்கள்
ஒப்பாரிகள்
மண் வாரி தூவி...
இன்னும்கூட
உன்னால்
தலை நிமிர முடிகின்றது
உனக்கும் கணக்குத்தெரியும்
உன்னுள்
அழித்தழித்து எழுதியவை
எத்தனையென ?
ஒவ்வொரு குனிவிற்குப்பின்னும்
பூகம்பமாய்
வெடித்துச் சிதறிடுவாய்
நாலுகால் பிராணியாய்
தத்தளிக்கும் காட்சி
நிறைவேறாமலே போகின்றது
போகட்டும் நீயும் போ
நாளைய
அறிவாளிகூடவா
முட்டாளாய் இருப்பான்
முள்ளோடு பிடுங்கிவந்து
எச்சில் துப்பி
ஈரமாக்கி
சானமடித்து
இன்னும் என்னென்னவொ....
காத்திரு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment