வணக்கம்

நட்பெனும் நந்தவனத்தை
எந்தத் தீ நாவுகளாலும்
எரித்துவிட முடியாது

எச்சில் மழை


இம்முறையும்

மிக சாமர்த்தியமாய்

வென்றுவிட்டதாய் நினைக்கிறாய்



தினமும் மனமுழுக்க

அழுக்குச்சேரும்போது

உனக்கு மட்டும் எப்படி ?

புன் சிரிப்போடு

பொழுது புறப்படுகின்றது



எத்தனை எத்தனை

சாபங்கள்

ஒப்பாரிகள்

மண் வாரி தூவி...



இன்னும்கூட

உன்னால்

தலை நிமிர முடிகின்றது



உனக்கும் கணக்குத்தெரியும்

உன்னுள்

அழித்தழித்து எழுதியவை

எத்தனையென ?



ஒவ்வொரு குனிவிற்குப்பின்னும்

பூகம்பமாய்

வெடித்துச் சிதறிடுவாய்

நாலுகால் பிராணியாய்

தத்தளிக்கும் காட்சி

நிறைவேறாமலே போகின்றது



போகட்டும் நீயும் போ

நாளைய

அறிவாளிகூடவா

முட்டாளாய் இருப்பான்



முள்ளோடு பிடுங்கிவந்து

எச்சில் துப்பி

ஈரமாக்கி

சானமடித்து

இன்னும் என்னென்னவொ....



காத்திரு

No comments:

Post a Comment